தமிழ்நாடு

tamil nadu

வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?

By

Published : Dec 24, 2022, 9:33 AM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு, முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?
வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?

தூத்துக்குடி: தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் சிறப்பு பெற்றது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் நடிகர் வடிவேலு செய்தியாளர் சந்திப்பு

என்ன மனக்குறைகள் இருந்தாலும், திருச்செந்தூர் முருகன் சன்னிதானம் வந்தால் மனக்குறைகள் நீங்கும். வாரிசு, துணிவு இரண்டு படங்களுமே வெற்றியடைய வேண்டும். எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். சினிமா நல்லா இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். நான் எந்த கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை.

என்னுடைய முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான். மாமன்னன், சந்திரமுகி 2 என நிறைய படங்கள் நடித்து வருகிறேன். நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

பலரும் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விஜய் வழியில் திடீரென ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா!

ABOUT THE AUTHOR

...view details