தமிழ்நாடு

tamil nadu

எடப்பாடி ஆட்சி இல்லை டெட்பாடி ஆட்சி - உதயநிதி ஸ்டாலின்

By

Published : May 17, 2019, 9:32 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நடப்பது எடப்பாடி ஆட்சி இல்லை டெட்பாடி ஆட்சி என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

file pic

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், இதற்கு முன்னர் உங்களிடம் நான் வாக்குக் கேட்டு வந்தபொழுது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டிருந்தேன். அதன்படி ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அதன் மூலமாக மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது.

தற்போது இங்கு டெட்பாடியின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்குதான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. மக்களாகிய நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து திமுகவை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

தனது ஆட்சிக்காலத்தில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு தேவைதானா?.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கூறியவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் தற்போது விசாரணை கமிஷனின் விசாரணைக்கு கூட அவர் ஆஜராகாமல் இருந்துவருகிறார்.

அதிமுகவினரின் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே அவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இதில் அவர்கள், மக்களை எப்படி பாதுகாப்பார்கள் என்று அப்போது கேள்வி எழுப்பினர்.


தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்பிக் நகர், மாப்பிள்ளையூரணி, செக்காரக்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இதற்கு முன்னர் உங்களிடம் நான் வாக்குக் கேட்டு வந்த பொழுது ஒரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டிருந்தேன். அதன்படி கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அதன் மூலமாக மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது. தற்போது இங்கு டெட்பாடியின் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ம
ஆணி அடிப்பதற்கு தான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கிறது. ஆகவே மக்களாகிய நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெட்பாடியின் ஆட்சியின் சவப்பெட்டிக்கு ஆணி அடித்து வெளியேற்ற வேண்டும்.

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபற்றி முதலமைச்சரிடம் கேட்ட பொழுது நான் இன்னும் தொலைக்காட்சியை பார்க்க வில்லை என அலட்சியமாக பதில் கூறினார். இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு தேவைதானா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இது தவிர தனது ஆட்சிக்காலத்தில் 36 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றதாக அவரே ஆட்சியை பெருமை படுத்திக்கொள்கிறார்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கடந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக முதலமைச்சர் என்ற பதவி , பிரதமர் நரேந்திர மோடி போட்ட பிச்சை.

கடந்த தேர்தலின் மூலமாக நரேந்திர மோடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பியது போல இந்த தேர்தலின் வாயிலாக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நமக்கு ஒரு பொருட்டல்ல.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறி விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என கூறியவர் ஓ பன்னீர்செல்வம். ஆனால் தற்போது விசாரணை கமிஷனின் விசாரணைக்கு கூட அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

அதிமுகவினரின் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கே அவர்களால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இதில் அவர்கள், மக்களை எப்படி பாதுகாப்பார்கள்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான தேர்தல் ஆகியவற்றில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி தான் முழுவதும் வெற்றி பெறப் போகிறது.

இந்த மக்கள் விரோத பாஜக அதிமுக ஆட்சியை வெளியேற்றுவதை தவிர மக்களுக்கு வேறு நல்ல விஷயம் இருக்க முடியாது. ஆகவே தேர்தல் முடிவுக்குப் பின்னர் வருகிற ஜூன் 3-ம் தேதி அன்று கலைஞரின் பிறந்தநாள் வரவுள்ளது. அன்றைய தினம் தமிழகத்தில் புதியதோர் ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏற்படுத்திட மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Visual process through reporter app.

ABOUT THE AUTHOR

...view details