தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை மக்களை மட்டும் வாட்டி வதைக்கவில்லை. மண்ணிலிருந்து மாண்டு போனவர்களையும் விட்டுவைக்காமல் துரத்தியடிக்கிறது.
தூத்துக்குடி 3-ம் மைலில் உள்ள இடுகாட்டில் தேங்கி நிற்கும் மழைநீரால் அங்குள்ள கல்லறைகள் அனைத்தும் மூழ்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் இறந்து போனவர்களை புதைப்பதற்காக அங்கு வருகிறவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் ஈமச் சடங்குகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.