தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தெஷ்ணமாற நாடார் சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில்தான் வேதா இல்லத்ததை நினைவிடமாக அரசு மாற்றியது. தீபா, தீபக் இருவரையும் நீதிமன்றம் வாரிசாகதான் அறிவித்துள்ளது. ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கவில்லை.