தமிழ்நாடு

tamil nadu

மக்களின் உணர்வை அரசு மதித்து நடக்க வேண்டும் - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கீதா ஜீவன் எம்எல்ஏ பேச்சு

By

Published : Oct 18, 2019, 11:21 PM IST

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் மக்களின் உணர்வினை அரசு மதித்து நடக்க வேண்டும் என எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Geeta Jeevan

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணி சென்றபொழுது கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

பல கட்ட விசாரணை அக்டோபர் 19ஆம் தேதியான நாளையுடன் நிறைவடைகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு 20 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் நேரில் ஆஜராகி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

கீதா ஜீவன் எம்எல்ஏ

பின்னர் செய்தியாளர்களிடம், "தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் அலட்சியப்போக்கு, மெத்தனம், மக்களின் உணர்வுகளை மதிக்காததே காரணம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாள்கள் போராடிய நிலையிலும் அவர்களிடம் அரசு சமாதானம் பேசவில்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவானவர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று இன்னமும் தெரியவில்லை. முதலமைச்சர் துப்பாக்கிச்சூடு நடந்தது தனக்குத் தெரியாது என்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுகவும் மக்களோடு மக்களாக போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த அரசு நடக்க வேண்டும்" என்றார்.

Intro:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு கீதா ஜீவன் எம்எல்ஏ நேரில் ஆஜராகி விளக்கம் - மக்களின் உணர்வினை அரசு மதித்து நடக்க வேண்டும் என பேட்டிBody:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணைக்கு கீதா ஜீவன் எம்எல்ஏ நேரில் ஆஜராகி விளக்கம் - மக்களின் உணர்வினை அரசு மதித்து நடக்க வேண்டும் என பேட்டி


தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் இறுதி நாளான மே 22-ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணி சென்ற பொழுது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்து உத்தரவிட்டது. ஒரு நபர் கமிஷன் ஆணையமானது 15-வது கட்டமாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. பதினைந்தாவது கட்ட விசாரணையானது கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த விசாரணை நாளை 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெறும் விசாரணையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கீதா ஜீவன் எம்எல்ஏ நேரில் ஆஜராகி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்பேரில் கீதா ஜீவன் எம்எல்ஏ இன்று தனது ஆதரவாளர்களுடன் ஒரு நபர் கமிஷனர் ஆஜராவதற்காக வந்திருந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற துயர சம்பவம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியது. அதற்காக இன்று ஒருநபர் கமிஷன் முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வந்துள்ளேன். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முழுக்க முழுக்க அரசின் அலட்சியப் போக்கே காரணம். அரசு மெத்தனமாக, மக்களின் உணர்வுகளை மதிக்காததே காரணம். நூறு நாட்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி இருக்கிறார்கள். போராட்டக்காரர்களிடம் அரசு சமாதானம் பேசவில்லை. அமைதி கூட்டங்களில் எதிர்ப்பாளர்களை அழைக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாளர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி தந்தார்கள் என்று இன்னமும் தெரியவில்லை. சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் இல்லை. முதலமைச்சர் துப்பாக்கிச்சூடு நடந்தது எனக்கு தெரியாது என்கிறார்.

எனவே இந்த சம்பவத்திற்கு முழுக்க காரணம் தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு தான்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் சொன்னது போல மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டும். மக்களுக்காகத்தான் அரசாங்கம் செயல்படுகிறது என்பதை உணர வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுகவும் மக்களோடு மக்களாக போராட்டங்களை நடத்தி இருக்கிறது மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறது.

ஆகவே மக்களின் உணர்வினை மதிப்பளித்து இந்த அரசு நடக்க வேண்டும் என்பதையே நானும் வலியுறுத்துகிறேன் என்றார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details