தமிழ்நாடு

tamil nadu

குலசை தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 2:03 PM IST

Dussehra festival start: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்
தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

தூத்துக்குடி: உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு, தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை (அக்.15) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறக்கூடிய இத்திருவிழாவில், நாள்தோறும் அம்மன் பல்வேறு அவதாரங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிசா சூரசம்ஹாரம் வரும் 24ஆம் தேதி நள்ளிரவில் நடைபெறுகிறது. தசரா திருவிழாவில் மாலை அணிந்து விரதம் இருக்கக் கூடிய பக்தர்கள் அம்மன், காளி, குரங்கு உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மம் பெற்று, அதை சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

இந்த தசரா திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், பக்தர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகாளய அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் திரண்ட மக்கள்.. சிறப்புகள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details