தமிழ்நாடு

tamil nadu

கோடை மழையால் மக்கள் குதூகலம்

By

Published : May 11, 2020, 1:17 PM IST

திருவாரூர் :நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவாரூர் :நகர்பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர் :நகர்பகுதிகளில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று காலை முதல் வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது.

வெப்பத்தை தணிக்கும் விதமாக இன்று காலை முதல் திருவாரூர் ,நகர்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது பெய்த இந்த கோடை மழையால் விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

புழுதிக் காற்றுடன் டெல்லியில் திடீரென மழை!

ABOUT THE AUTHOR

...view details