தமிழ்நாடு

tamil nadu

செங்கம் அருகே அரசு பேருந்து - சொகுசு கார் மோதி கோர விபத்து.. 6 பேர் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 10:26 PM IST

Updated : Oct 23, 2023, 10:50 PM IST

Tiruvannamalai Accident: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்து கார் மீது மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த 14க்கும் மேற்பட்டோர் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கார் மற்றும் அரசு பேருந்து
விபத்துக்குள்ளான கார் மற்றும் அரசு பேருந்து

செங்கம்:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் மோதியது. இதில், காரில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், காரில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் என 14க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? விபத்து நிகழ்ந்தது எப்படி? என மேல்செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 15ஆம் தேதி செங்கம் அருகே உள்ள பக்கிரி பாளையம் பகுதியில் கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், இன்று செங்கம் பகுதியில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரபல தனியார் உணவக சாம்பார் இட்லியில் மிதந்த புழு - உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு!

Last Updated :Oct 23, 2023, 10:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details