திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார். மேலும் பல்வேறு துறை அலுவலர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது, விவசாயிகள் கூறுகையில், "ஏரிகளுக்கு மழை நீர் வரும் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளன. அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்பட வேண்டும். வேளாண்மைக் கூட்டுறவுக் கடைகளில் வழங்கப்படும் உரம் தரமானதாக இல்லை. இதனை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்
நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், நீண்ட காலமாக உள்ள கரும்பு நிலுவைத் தொகையினை பெற்றுத் தருவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் நெல்லை வாங்காமல், விவசாயிகளின் நெல்லை வாங்க வேண்டும்.