தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை; காதலன் கைது!

By

Published : Mar 24, 2021, 7:53 PM IST

திருவண்ணாமலை: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மனமுடைந்த இளம் பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை
கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காழியூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (25) என்பவரும், கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் ராஜேஷ் தனிமையில் இருந்துள்ளார்.

இதனால் கர்ப்பமான இளம்பெண், ராஜேஷிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததால், கடந்த 16ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அப்பெண் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இளம்பெண் நேற்று (மார்ச் 23) காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக காதலன் ராஜேஷை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு; காவலர், 71 போராட்டக்காரர்கள் மீது குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details