தமிழ்நாடு

tamil nadu

2ஆம் காதலனை வைத்து முதல் காதலனை தீர்த்துக்கட்டிய பெண்!

By

Published : Jan 24, 2020, 10:40 AM IST

திருவண்ணாமலை: ஒரே நேரத்தில் இரண்டு நபர்களைக் காதலித்த பெண் ஒருவர், முதல் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை இரண்டாவது காதலனை வைத்து கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (37) . இவர் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாக நதி தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ் (41) என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாத காலமாக கிருஷ்ணவேணி ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஒரேநேரத்தில் இருவரையும் காதலித்துள்ளார். இந்நிலையில், சுரேஷ் கிருஷ்ணவேனியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி மற்றொரு காதலனான அஜித்துடன் சேர்ந்து சுரேஷை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 17ஆம் தேதியன்று இரவு சுரேஷை வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரவழைத்த கிருஷ்ணவேணி, அஜித்குமாருடன் சேர்ந்து சுரேஷை கொடூரமான முறையில் மார்பில் கத்தியால் குத்தியும், கட்டையால் தாக்கியும் கொலைசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் கழித்து புதருக்குள் ஆண் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு தகவலளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுரேஷின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர் அஜித் குமார்

இதில், கிருஷ்ணவேணிக்கும் அஜித்குமாருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர், அஜித் குமாரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து சுரேஷை கொலைசெய்தது அம்பலமானது. இதனையடுத்து அஜீத் குமாரை ஆரணி நகர காவல் துறையினர் கைதுசெய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாகியுள்ள காதலி கிருஷ்ணவேணியை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு நபர்களைக் காதலித்த பெண் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மற்றொரு காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலித்த பெண் முதல் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இரண்டாவது காதலனை வைத்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு.Body:ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலித்த பெண் முதல் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இரண்டாவது காதலனை வைத்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (37) என்பவர் ஆரணி டவுன் சைதாப்பேட்டை கமண்டல நாக நதி தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் 41 என்ற இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

மேலும் கடந்த 6 மாதகாலமாக கிருஷ்ணவேணி ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அஜித்குமார் (21) என்பவருடன் காதல் ஏற்பட்டு ஒரே நேரத்தில் இருவரையும் காதலித்து வந்துள்ளார்.

மேலும் கட்டிடத் தொழிலாளி சுரேஷ் கிருஷ்ணவேனியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி மற்றொரு காதலனான அஜித்துடன் சேர்ந்து சுரேஷ் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி கடந்த 17,1,20 அன்று இரவு சுரேஷை செல்போன் மூலம் உல்லாசத்துக்கு அழைத்த கிருஷ்ணவேணி ஆள்யாரும் இல்லாத மறைவிடத்திற்கு அழைத்து சென்று அங்கு மறைந்திருந்த மற்றொரு காதலனுடன் சேர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கொடூரமான முறையில் மார்பில் குத்தி கட்டையால் தாக்கி சுரேசை கொலை செய்தனர்.

இதையடுத்து இரண்டு நாட்கள்கழித்து புதருக்குள் ஆண் சடலம் ஒன்று இருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் நகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர் அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆரணி நகர காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணவேணி அஜித்குமார் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டுபித்த போலீசார் அஜித் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து சுரேசை கொலை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து அஜீத் குமாரை ஆரணி நகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாகியுள்ள காதலி கிருஷ்ணவேணியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலித்த பெண் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மற்றொரு காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை காதலித்த பெண் காதலன் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மற்றொரு காதலனை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details