தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரில் மனைவியிடம் அத்துமீறிய நபரை அடித்துக் கொன்றவர் கைது

By

Published : Jul 16, 2021, 8:22 AM IST

மனைவியிடம் அத்துமீறிய அடையாளம் தெரியாத நபரை அடித்து கொன்றவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலை
கொலை

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு ஏரிக்கரையில் நேற்றிரவு (ஜூலை 14) ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன், சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியிடம் அத்துமீறியதால் அடித்துக் கொலை

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அங்குள்ள மீன்பண்ணையில் வேலை பார்த்து வரும் பூங்காவனம் என்பவரது மனைவியிடம் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் அத்துமீறியது தெரிய வந்தது.

இதனால் கோபமடைந்த பூங்காவனம், அடையாளம் தெரியாத நபரை அடித்துக் கொன்றுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பூங்காவனத்தைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் நண்பரைக் கொலை செய்து புதைத்த இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details