திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பைபாஸ் சாலையில் சிப்காட் காவலர்கள் நேற்று (செப்.04) தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 21), புளியந்தோப்பைச் சேர்ந்த பிரவீன் (வயது 25) ஆகியோரை மடக்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஆந்திராவில் இருந்து 1.5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.