தமிழ்நாடு

tamil nadu

போலி ரூபாய் நோட்டுகளால் ஏமாற்றும் கும்பல்: 3 பேர் கைது!

By

Published : Jun 29, 2021, 9:14 PM IST

Updated : Jun 29, 2021, 9:52 PM IST

இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து நூதன மோசடி செய்த கும்பலில் மூன்று பேர் ஆந்திர மாநில காவல் துறையிடம் சிக்கினர்.

இரண்டு ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி  - 3 பேர் கைது
இரண்டு ஆயிரம் ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி - 3 பேர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி ஆடு மேய்த்தல் தொழில் செய்கிறார். தனக்கு சொந்தமான 30 ஆடுகளை அவர் மேய்த்துக்கொண்டிருந்தபோது ஆட்டோவில் மூன்றுபேர் வந்தனர்.

அவர்கள் முனுசாமியிடம் பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி ஆடுகள் வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி முனுசாமி நான்கு ஆடுகளை ரூ. 64 ஆயிரம் ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளார். இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் 32 வீதம் ரூ.64 ஆயிரத்தை கொடுத்துவிட்டு ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் முனுசாமி பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள் அது கள்ளநோட்டு என கண்டுபிடித்துள்ளனர். இதனை உறுதி செய்வதற்காக அருகிலிருந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வழங்கியபோது அனைத்து ரூபாய் தாள்களும் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த முனுசாமி உடனடியாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கே.வி.பி புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதே போன்ற மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரித்த சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், தமிழ்நாட்டில் கனகம்மாசத்திரம் பகுதியில் கைவரிசையை காட்டியது இவர்கள் தான் என தெரியவந்தது.

மேலும் இவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் என்ற பெண், அப்துல்ஷெரிப், பர்க்கத்துல்லா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்து மோசடிக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் ஆந்திர மாநில காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு பழனிசாமி நிவாரணம்

Last Updated : Jun 29, 2021, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details