தமிழ்நாடு

tamil nadu

வினையில் முடிந்த விளையாட்டு.. திருவள்ளூரில் 11 வயது பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்

By

Published : Sep 26, 2022, 7:31 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அடுத்த புழல் பகுதியில் 11 வயது பள்ளி மாணவனின் கழுத்தை கயிறு இறுக்கியதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவள்ளூர்:புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 11). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கார்த்திக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தூக்கில் தொங்குவது எப்படி? என நேற்று (செப்.25) 7 மணிக்கு விளையாட்டாக தனது சகோதரர்களுடன் இணைந்து நடித்துக் காட்டியதாகக் கூறப்படுகிது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறுக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த புழல் போலீசார், கார்த்திக் உடலை பறிமுதல் செய்து உடற்கூராய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை குறித்த சிந்தனையை கைவிடுங்கள்..

இதையும் படிங்க: ரஷ்யாவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு... 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு...

ABOUT THE AUTHOR

...view details