தமிழ்நாடு

tamil nadu

புதுமணத் தம்பதி திருமணமான மூன்றே நாள்களில் உயிரிழப்பு!

By

Published : Nov 1, 2021, 1:13 PM IST

திருவள்ளூரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் திருமணமாகி மூன்றே நாள்களான தம்பதியினர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்து  திருவள்ளூரில் சாலை விபத்து  கார் விபத்து  லாரி விபத்து  சாலை விபத்தில் புதுமண தம்பதியினர் உயிரிழப்பு  thiruvallur news  thiruvallur latest news  car accident  road accident  car and lorry accident  newly married couple dead by accident
விபத்து

திருவள்ளூர்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவருக்கும், சென்னை பீர்க்கன்கரணையைச் சேர்ந்த மருத்துவர் கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று (அக்.31), இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் மீது மோதியது.

விபத்தில் நொறுங்கிய கார்

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து அறிந்த மப்பேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சுமார் ஐந்து மணி நேரம் போராடி லாரிக்குள் சிக்கிக் கொண்டிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி மூன்று நாள்களிலேயே விபத்தில் சிக்கி கணவன் - மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அடிதடி - மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details