தமிழ்நாடு

tamil nadu

'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்' - நரிக்குறவ மக்களுக்கான நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் பேச்சு!

By

Published : Apr 15, 2022, 6:02 PM IST

ஆவடி அருகே நரிக்குறவர் இன மக்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

நரிக்குறவ மக்களுடன் ஒரு சந்திப்பு
நரிக்குறவ மக்களுடன் ஒரு சந்திப்பு

திருவள்ளூர்: ஆவடி மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சருடன் அவர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து "ஸ்டாலின் தான் வராரு ; தளபதி தளபதி எங்கள் தளபதி " ஆகிய
பாடல்களை பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உற்சாகத்தில் மக்கள்

பேருந்து நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் புதியதாக அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் மற்றும் குடிநீர் குழாய்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, குடியிருப்பு பட்டா மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள் என சுமார் இருநூறு பயனாளிகளுக்கு முதலமைச்சர் உதவித்திட்டங்களை வழங்கினார்.

'நீங்க வராதீங்க; நாங்க வர்றோம்':அப்போது உரையாற்றிய முதலமைச்சர், 'நரிக்குறவர்கள் மட்டுமின்றி எளிய மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் சென்று அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். தற்போது அவை படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விளிம்புநிலை மக்கள் அரசை தேடி வர வேண்டாம். நாங்களே தேடி வந்து அடிப்படை வசதிகளை செய்துகொடுப்போம். தமிழ்நாடு மக்களின் ஒவ்வொரு இலக்கை எட்டவும் இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது' என்றார்.

முதலமைச்சரின் உரை

நாட்டுக்கோழி குழம்பு ஒரு பிடி: தொடர்ந்து முதலமைச்சரை அப்பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யா தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். இதனை ஏற்ற முதலமைச்சர் மாணவியின் வீட்டிற்குச்சென்று, மாணவியின் குடும்பத்தாரை சந்தித்துப்பேசினார். அப்போது, மாணவியின் தாயார், முதலமைச்சருக்கு இட்லியும் நாட்டுக்கோழி குழம்பினையும் பாசத்துடன் பரிமாறினார். அதனை சுவைத்த முதலமைச்சர், சிறுமிகளுக்கும் ஊட்டிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினர்.

மாணவி வீட்டில் உணவு -

தொடர்ந்து, அங்கிருந்த மாணவிகளிடம் கலந்து பேசிய முதலமைச்சர், 'அவர்களை நன்றாக படிக்க வேண்டும்' என அறிவுறுத்தி அங்கிருந்து சென்றார். முதலமைச்சரின் வருகை கண்ட அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க:ராங்காக பேசிய காவலர்; ட்வீட் செய்த வடகிழக்குமாநிலப் பெண் - வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு!

ABOUT THE AUTHOR

...view details