திருநெல்வேலி:பிராஞ்சேரி அருகே மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து, முன்னீர்பள்ளம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், பிராஞ்சேரி அருகே குளக்கரையில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இறந்தவரின் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து நிலையில், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.