தமிழ்நாடு

tamil nadu

களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

By

Published : Aug 4, 2022, 9:18 PM IST

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு..!
களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு..!

நெல்லை:களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தலையணை அமைந்துள்ளது. இங்கு ஓடும் நீரில் குழுமை அதிகம் என்பதால் இங்கு குளிப்பதற்கு உள்ளூர் மட்டுமில்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.

களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு..!

இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக களக்காடு தலையணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடைய களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தலையணை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

வெள்ளம் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தேசியக்கொடியை எப்படி மடிக்க வேண்டும் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details