தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் திமுக பிரமுகர் வெட்டிகொலை

By

Published : Jan 30, 2022, 11:43 AM IST

பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகிலேயே திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

dmk-district-secretary-killed-in-nellai
dmk-district-secretary-killed-in-nellai

திருநெல்வேலி:பாளையங்கேட்டையில் வசித்து வருபவர் திமுக செயலாளர் பொன்னு தாஸ் என்கிற அபே மணி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு (ஜன. 29) திருநெல்வேலி, பாளையங்கோட்டை காவல் நிலையம் அருகே மணி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதபமாக உயிரிழந்தார்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details