தமிழ்நாடு

tamil nadu

சிறுபான்மை மக்களுக்காக மோடி அரசு வழங்கும் திட்டங்களை திமுக புறக்கணிக்கிறது - வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

By

Published : Jul 8, 2023, 12:26 PM IST

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்காக பிரதமர் மோடி அரசு வழங்கிய 313 கோடி ரூபாய் நிதியை ஸ்டாலின் அரசு செயல்படுத்தாமல் வைத்துள்ளது என பாஜக சிறுபான்மை நல அமைப்பின் மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

in Cumbum Vellore Ibrahim said Stalin government did not use the scheme for the minority people given by Modi
சிறுபான்மையின மக்களுக்காக மோடி வழங்கிய திட்டத்தை ஸ்டாலின் அரசு பயன்படுத்தவில்லை - வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்கள் சந்திப்பு

தேனி: பாரதிய ஜனதாவின் சிறுபான்மை நல அமைப்பின் மாநில பொறுப்பாளர் வேலூர் இப்ராஹிம் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க நிகழ்ச்சிக்காக நேற்று (ஜூலை 7) தேனி மாவட்டம் கம்பம் வந்தார். கட்சியை பலப்படுத்தும் நோக்கில் அவர் கம்பம் நகரில் உள்ள பல்வேறு சமுதாய அமைப்புகளின் முக்கிய தலைவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது சமுதாய தலைவர்களிடம் மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சிறப்பு பற்றியும், அதற்கு தங்களுடைய ஆதரவு எப்பொழுது வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதாவின் மாவட்டத் தலைவர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.

பின்னர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு செய்த நல்ல திட்டங்களையும், அதன் பயனாளிகளையும் சந்தித்து விளக்கம் அளிப்பதற்காகவே இந்த நிகழ்வை பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடத்திக் கொண்டிருக்கிறோம். தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் அறியாமையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை எஸ்டிபிஐ மற்றும் தமுமுக போன்ற அமைப்புகள் மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபட செய்கின்றனர். இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என்று நரேந்திர மோடி அரசு ரூபாய் 313 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் தமிழக ஸ்டாலின் அரசு, மோடி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவே அவற்றை செயல்படுத்தாமல் வைத்துள்ளது. நான் எங்கு சென்றாலும் என்னை எந்த ஒரு செயலும் செய்ய விடாமல் வலைத்தளங்களில் ஒரு சில சமூக விரோதிகள் பரப்பும் செயலை நம்பி காவல் துறையினர் எனக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

ஆனால் காவல்துறையினர்கள் வதந்திகளை பரப்புவர்களை கைது செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாமல் விட்டால் சமூக விரோதிகள் எளிதில் வளர்ச்சி அடைந்து விடுவார்கள். நான் இதுவரை ஆயிரம் கூட்டங்களுக்கு மேல் சிறப்புரை ஆற்றியுள்ளேன் இதுவரைக்கும் என் மேல் எந்த ஒரு வழக்குகளும் இல்லை. ஆனால் எஸ்டிபிஐ, தமுமுக போன்ற அமைப்புகள் மேல் ஆயிரம் வழக்குகள் உள்ளது.

எங்கள் தலைவர் அண்ணாமலை கூறியது போல் ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து மோடி அரசின் சிறப்புகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, வருகின்ற வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற வைப்போம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி கைது.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை..!

ABOUT THE AUTHOR

...view details