தேனி:ஆடி அமாவாசையை முன்னிட்டு தேனியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று(ஜூலை 28) சதுரகிரியில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்தனர். தேனி மாவட்டம் கடமலைகுண்டு உப்புத்துறை யானைகெஜம் மலைப்பாதை வழியாக இரவில் திரும்பி வந்தனர்.
அதிகாலை ஒரு மணி அளவில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றை கடக்க முடியாமல் சுமார் 200 பேர் சிக்கித் தவித்தனர்.