தமிழ்நாடு

tamil nadu

சுருளி அருவியில் குளிக்கத் தடை!

By

Published : Oct 30, 2019, 6:21 PM IST

தேனி: சுருளி அருவியில் குளிப்பதற்கு 10ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

river

தேனி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுருளி அருவியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சுருளி அருவி

இந்நிலையில், 10ஆவது நாளாக தொடரும் தடையால் அருவிக்கு ஆசையோடு குளிக்கவரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர். மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பருவமழை பெய்துவருகிறது.

இதையும் படிங்க:ரம்மியமாகக் காட்சியளிக்கும் கும்பக்கரை அருவி!

ABOUT THE AUTHOR

...view details