தமிழ்நாடு

tamil nadu

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

By

Published : Nov 16, 2021, 2:43 PM IST

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம்
ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம்

நீலகிரி:ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில் மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரிசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரி உத்தரவிட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தது. இதனைத் துரிதமாகச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியதால், அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால் நிர்வாகரீதியாக மாற்றங்களைச் செய்ய அனுமதிவேண்டும் என தமிழ்நாடு அரசு இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய அனுமதி அளித்திருக்கிறது.

இதையும் படிங்க:ஒரு வாரத்தில் மட்டும் கடலில் கலந்து வீணான 9 டிஎம்சி நீர் - ஜி.கே. மணி வேதனை

ABOUT THE AUTHOR

...view details