தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிக்குப் பிணை வழங்கி உத்தரவு

By

Published : Jul 19, 2021, 9:29 PM IST

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் நபருக்கு, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிணை
பிணை

நீலகிரி: கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்குள்ள சொகுசு பங்களாவில் 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது.

அப்போது இரவு காவலாளி ஓம் பகதூர் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், உதயக்குமார், சதீசன் உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

நிபந்தனை பிணை வழங்கி உத்தரவு

இந்நிலையில் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் பிணை கிடைக்காததால் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்துவந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு சயானுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி பிணை வழங்க உத்தரவிடக்கோரி வாளையாறு மனோஜ் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். தாக்கல்செய்யப்பட்ட பிணை மனுவை மாவட்ட நீதிபதி சஞ்சிவ் பாபா ஏற்றுக்கொண்டார்.

அதன்படி வழக்கு முடியும் வரை உதகையிலேயே தங்கி இருத்தல், ஒவ்வொரு திங்கள் கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராகுதல் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பிணை வழங்கி இன்று (ஜூலை 19) உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கோமியத்தை விமர்சித்ததால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் விடுதலை

ABOUT THE AUTHOR

...view details