தமிழ்நாடு

tamil nadu

'வேளாண் சட்டங்கள் வாபஸ்.. தேர்தல் தோல்லி பயம், சுயநலம்' - ஆ. ராசா பேச்சு

By

Published : Nov 19, 2021, 7:55 PM IST

நடைபெற்றவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்ற பயத்தால் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

ஆ. ராசா பேட்டி
ஆ. ராசா பேட்டி

நீலகிரி:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று (நவ.19) மழையால் பாதிக்கப்பட்ட வீசி காலனி, RK புரம், எல்லநள்ளி உள்ளிட்ட பகுதிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா (MP A Rasa), வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் (Minster K. Ramachandran) ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினர். இடியும் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் உதகை படகு இல்லம் சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்தனர்.

ஆ. ராசா பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, "நீலகிரியில் கன மழையால் சேதமடைந்த 20 குடியிருப்புகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும். பாஜக அரசியல் செல்வாக்கை இழந்து வருவதாக உளவுத்துறையின் எச்சரிக்கையால், வரவுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு மூன்று வேளாண் சட்டங்களை (farm laws) திரும்ப பெற்றுள்ளது. தேர்தலுக்காக சுயநலமாக செய்துள்ளனர் " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Then Pennai River வெள்ளப்பெருக்கு - சுடுகாடு கொட்டகை இடிந்து விழும் நேரடி காட்சி

ABOUT THE AUTHOR

...view details