தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், கல்லணையில் இருந்து மன்னார்குடிக்கு வரகூர் வழியாகச் சென்ற தனியார் பேருந்து, நேற்று காலை (ஜன.12) எதிரில் வந்த லாரிக்கு வழிவிட ஒதுங்கியது. அப்போது சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட இடத்தில் பேருந்தின் சக்கரங்கள் சிக்கவே, ஒருபுறமாக பேருந்து சாய்ந்துள்ளது.
இதில் எதிர்பாராத விதமாக பேருந்து மின்கம்பியில் உரசியது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே வரகூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராமன் (55), கருப்பூர் பகுதி கணேசன் (50), அரியலூர் நடராஜன் (45) உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். செந்தலை பகுதி முனியம்மாள் (60), மணத்திடல் பகுதி செபஸ்டின் (எ) அம்புரோஸ் (31), வளப்பக்குடி லூர்து சேவியர் (42) ஆகியோர் படுகாயமடைந்தனர்.