டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஜேஎன்யு மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் செய்தனர்.