தமிழ்நாடு

tamil nadu

'ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக்' - அண்ணாமலை விமர்சனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:29 AM IST

K.Annamalai: ஊழல் வழக்குகளில் சிறை செல்லும் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்காக சென்னை புழல் சிறையில் 4 மாடிகள் கொண்ட தனி பிளாக் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலடிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார்.

K Annamalai Speech
ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக் அமைத்திட வேண்டும்

ஊழல் வழக்குகளில் சிக்கும் திமுக அமைச்சர்களுக்கு புழல் சிறையில் தனி பிளாக் - அண்ணாமலை

தஞ்சாவூர்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின், 'என் மண் என் மக்கள்' நடைபயணம் 68வது நாளில், நேற்று (டிச.25) பாபநாசம் சட்டமன்ற தொகுதி பசுபதிக்கோயில் இருந்து தொடங்கி, கும்பகோணம் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்தார். அங்கு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து நடைபயணத்தை நிறைவு செய்து, பிரச்சார வாகனத்தில் இருந்தபடி அண்ணாமலை தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், 'ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறை செல்லும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்களுக்காக, சென்னை புழல் சிறையில் 4 மாடிகள் கொண்ட தனி பிளாக் அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டலடிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார்.

ஆண்டவனே முடிவு செய்தது போல, 1980ஆம் ஆண்டு முதல் இதுவரை கும்பகோணம் மகாமக விழாவின் போது, திமுக ஆட்சியில் இருந்தது இல்லை. அதுபோல, 2028 கும்பகோணம் மகாமகத்தின் போது திமுக ஆட்சியில் இருக்க போவதில்லை என்றும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப கட்சிகள், ஊழல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக இந்த மண்ணை விட்டு அகற்ற கிடைக்கும் முக்கியமான தேர்தல் என்றும், இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியா கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்?:இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) உள்ள அனைத்து மோசமான கட்சிகளுக்கும் தலைவனை போல திமுக உள்ளது. ஊழல், குடும்ப ஆட்சி, மக்கள் வரிப்பணத்தை திருடி மக்கள் பாவங்களை சுமக்கும் அனைத்து விதமான மோசமான கேட்டகிரியிலும் நம்பர் ஒன்னாக இருக்க கூடிய கட்சி திமுக தான். முதலமைச்சர் தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பின் போது அங்கேயே தங்கி கடைசி ஆளாக திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவரே, இந்தியா கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றார். இவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே இல்லை.

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்' என பேசியதற்கு மக்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சபரீசனும், உதயநிதியும் இரு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னது, 'உங்க அப்பன் வீட்டு பணமா?' என கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் குண்டும் குழியுமான சாலைகள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details