தமிழ்நாடு

tamil nadu

செல்போன் வெளிச்சத்தில் இறுதிச் சடங்கு - தென்காசியில் அவலம்

By

Published : Feb 15, 2022, 11:56 AM IST

தென்காசி மாவட்டத்தில் மயானத்தில் மின்வசதி இல்லாததால் செல்போன் வெளிச்சத்தைக் கொண்டு இறுதிச் சடங்கு நடத்திய அவலம் நிகழ்ந்துள்ளது.

tenkasi district people request electricity facility at graveyard
செல்போன் வெளிச்சத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்ற அவலம்

தென்காசி: சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி 18 வார்டுகளைக் கொண்டுள்ளது. இப்பகுதியிலுள்ள மக்கள் நெற்கட்டும் சேவல் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் மயானத்தை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், இந்த மயானத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால், இங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வு செல்போன் வெளிச்சம் மூலமாக நடைபெற்றது.

இதனையடுத்து அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்போன் வெளிச்சத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்ற அவலம்

இதையும் படிங்க: கால்வாயில் இறங்கி சடலத்தை சுமந்து செல்லும் அவல நிலையில் அருணகிரியூர் கிராமம்

ABOUT THE AUTHOR

...view details