தமிழ்நாடு

tamil nadu

பெண்ணின் இறப்பில் மர்மம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Apr 27, 2022, 7:20 AM IST

தென்காசியில் பெண்ணின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணின் இறப்பில் மர்மம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறையை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம்
பெண்ணின் இறப்பில் மர்மம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

தென்காசி:சுரண்டையை சேர்ந்தவர் ஜோதி(27), அவரது கணவர் சூர்யா. இவர்களுக்கு திருமணம் முடிந்து 11வருடங்களாகிய நிலையில், அர்ஜீனன் என்ற மகனும், லாவன்யா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் ஜோதி நேற்று அதிகாலையில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு சுரண்டை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஜோதியின் கணவர் அவரை அடித்து துன்புறுத்தியதாகவும், எனவே அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கணவர் சூர்யா மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க:அடிக்கடி பழுதாகிய இ - பைக்: ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்!

ABOUT THE AUTHOR

...view details