தமிழ்நாடு

tamil nadu

தென்காசியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 11:33 AM IST

Christmas Festival: தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலங்களில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

christmas festival
கிறிஸ்துமஸ்

தென்காசியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல கொண்டாட்டம்

தென்காசி: இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயேசு கிறிஸ்துவின் போதனையான அன்பின் வழிகள் குறித்தும், அவர் சொல்லினக் கட்டளைகளை குறித்தும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்று கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் தின நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடடுகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், வெள்ளாலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் இன்று அதிகாலையில் எழுந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். மேலும் இன்றைய நாளில் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் தினம் வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கிறிஸ்மஸ் தினம் டிசம்பர் மாதம் முழுவதும் தேவாலயங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் அரங்கேறுவது வழக்கம், அதன்படி, கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக கீத ஆராதனை சிறப்பு பிரார்த்தனை கூட்டம், ஒவ்வொரு கிராம பகுதிக்களுக்கும் சென்று ஏழை எளிய மக்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூலம் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் உதவிகளை செய்தனர்.

அதுமட்டுமின்றி தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று கிறிஸ்தவ பெருமக்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஒரு சிறந்த வருடமாக அமைய சிறப்பு பிரார்த்தனையும், செல்வம் செழித்து இன்புற்று, வருகின்ற வருடத்தில் சீற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு, வருகிற வருடம் அனைவருக்கும் சந்தோசமாக அமைய சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

அதிகளவில் மக்கள் தேவாலயங்களில் கூடுவதால், எந்த வித அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க தென்காசி மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினர் தேவாலயங்கள் முன்பு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..ஏராளமானோர் பங்கேற்பு

ABOUT THE AUTHOR

...view details