தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு.. இளம்பெண் விபரீத முடிவு!

By

Published : Nov 27, 2022, 7:35 PM IST

சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70,000-யை இழந்த வட மாநில பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பந்தனா மாஜி(24) என்ற இளம்பெண் தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். அவர், ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி ரூ.70,000 பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால், நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று(நவ.27) வீட்டில் தனியாக இருந்த பந்தனா தற்கொலை செய்துக்கொண்டார். என அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு உடற்கூராய்வுக்காக ஆனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மறவாதீர்கள்..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் தடை இன்னும் அமலுக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒருத்தன ஏமாத்தனும்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் என்ன?!

ABOUT THE AUTHOR

...view details