தமிழ்நாடு

tamil nadu

‘நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும்’ - எச்.ராஜா

By

Published : Aug 14, 2019, 5:07 PM IST

சிவகங்கை: செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை குறித்து பேசிய எச்.ராஜா, நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

"நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்" - எச். ராஜா பேட்டி!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்னையை வரவேற்றது அவரை தேசத்தின் மீது நலன் கொண்டவராகக் காட்டுகிறது என்றும், ப.சிதம்பரத்தை பூமிக்கு பாரமாக இருப்பவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது சரியானதே என்றும் கூறினார்.

‘நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டாடு கேட்கும்’ - எச். ராஜா

அதேபோல், கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ள அவர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கண்ணப்பன் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று வெளியிட்ட சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும், நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடுகள் கேட்கும் எனவும் தெரிவித்தார்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.14

பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கை இந்து விரோத
செயல் - எச். ராஜா பேட்டி!

சிவகங்கை: பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும் இது இந்து விரோத செயல் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Body:காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது, நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்சனையை வரவேற்றது அவர் ஒரு தேச நலன் கொண்டவர் என்பதை காட்டுகிறது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கண்ணப்பன் பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு, நெற்றியில் பொட்டு வைப்பது கூடாது என்ற சுற்றறிக்கையை வாபஸ் பெற வேண்டும். இது இந்து விரோத செயல் என்றவர் இந்த சுற்றிக்கையை அனுப்பிய ஆணையரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Conclusion:முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ப.சிதம்பரத்தை பூமிக்கு பாரம் என விமர்சனம் செய்தது மிகச் சரியானதே என்றவர் கார்த்தி சிதம்பரம் அனுபவம் இல்லாமல் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details