தமிழ்நாடு

tamil nadu

தமிழர் வரலாறு கீழடி: 7ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் முதுமக்கள் தாழிகள்

By

Published : Mar 1, 2021, 4:11 PM IST

சிவகங்கை: கீழடியில் நடைபெற்றுவரும் ஏழாம் கட்ட அகழாய்வு கொந்தகை தொல்லியல் களத்தில் தற்போது விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. கொந்தகை பகுதி ஈமக்காடு என்பதால் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

7ஆம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகள்
7ஆம் கட்ட அகழாய்வு பணியில் முதுமக்கள் தாழிகள்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணியின்போது கீழடி மட்டுமன்றி அதன் அருகே உள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளிலும் பணிகள் நடைபெற்றன. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஆறாம்கட்ட அகழாய்வு நிறைவுற்றது.

இந்நிலையில், அப்பகுதியில் ஏழாம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருந்த நிலையில், மீண்டும் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளில் ஈடுபடும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து பிப்ரவரி 6ஆம் தேதி கொந்தகை அகழாய்வுப் பணிகளுக்கான பூமி பூஜையும், சுத்தப்படுத்தும் பணிகளும் தொடங்கின. கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்தார். இதில் தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்கள், உள்ளூர் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழர் வரலாறு கீழடி

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பாக சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

முதுமக்கள் தாழிகள்

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பணிகள் தொடங்கிய நிலையில் கொந்தகை தொல்லியல் களத்தில் அகழாய்வு குழிகள் சற்றேறக்குறைய அரை அடி ஆழத்திற்கு இதுவரை தோண்டப்பட்டுள்ளன.

ஈமக்காடு என்பதால் கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் தென்படத் தொடங்கியுள்ளன. கீழடி அகரம், மணலூர் ஆகிய தொல்லியல் களங்களில் பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில் கொந்தகையில் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் இங்கு நடைபெறும் அகழாய்வுப் பணிகளில் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் கண்டறியப்படக் கூடும் எனத் தொல்லியல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details