தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

By

Published : Feb 12, 2020, 4:00 PM IST

சேலம்: அம்மாப்பேட்டை பகுதியில் நடந்து செல்லும் பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

சேலம் அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சேரந்த சாரதா நேற்றிரவு 9.15 மணியளவில் மளிகை கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஆள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் சாரதாவின் கழுத்திலிருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து சாரதா அளித்தப் புகாரின் பேரில், அம்மாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிசிடிவி காட்சிகள்

தற்போது சாரதாவின் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர், பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் காவல் துறையினருக்குக் கிடைத்துள்ளது. அந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் நின்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details