தமிழ்நாடு

tamil nadu

திருமணத்தை மீறிய உறவிலிருந்த ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை!

By

Published : Mar 8, 2021, 7:11 PM IST

சேலம்: ஆட்டையாம்பட்டி அருகே திருமணத்தை மீறிய உறவிலிருந்த ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

relative-beyond-marriage-couple-commits-suicide-by-jumping-into-lake
relative-beyond-marriage-couple-commits-suicide-by-jumping-into-lake

சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்( 26). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காக்காபாளையத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கு கிஷோர் (3),சுரேந்திரன் (8 மாதம்) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்த நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கோமதி (30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதில் கோமதிக்கு தினேஷ் (10), கந்தசாமி (9) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையில், அவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பது கோமதியின் சகோதரி சரசுக்கு தெரியவந்துள்ளது. இதனால் சகோதரிகள் இடையே தகராறு ஏற்பட்டு, சரசு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்திற்கு பின்னர் கோமதியின் உறவினர்கள் சிலர் கோமதியையும், சேகரையும் அழைத்து இருவரும் இனி பேசக்கூடாது, பழகக்கூடாது என்று கண்டித்துள்ளனர்.

இதனால் சேகரும், கோமதியும் பேசாமல் பார்க்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி சேகர், கோமதி ஆகிய இருவரையும் காணவில்லை என்பதால் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் ஆட்டையாம்பட்டி அருகிலுள்ள பாப்பாரப்பட்டி ஏரியில் இருவரது சடலங்கள் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இருவரும், கைகளை கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணத்தை மீறிய உறவிலிருந்து ஜோடி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்...பெண் மீது திராவக வீச்சு

ABOUT THE AUTHOR

...view details