தமிழ்நாடு

tamil nadu

சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

By

Published : Mar 12, 2022, 8:13 AM IST

சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

செயின் பறிப்பு சிசிடிவி காட்சி
செயின் பறிப்பு சிசிடிவி காட்சி

சேலத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை மூங்கில் பாடி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (70). இவர் மார்ச் 10ஆம் தேதி மாலை பஜனை மடம் தெருவில் நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து பத்மாவதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

செயின் பறிப்பு சிசிடிவி காட்சி

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:WATCH: பால் வாங்க சென்ற பெண்ணிடம் செயினைப் பறிக்க முயற்சி

ABOUT THE AUTHOR

...view details