தமிழ்நாடு

tamil nadu

"காமஷேத்ராவாக மாறிய பெரியார் பல்கலைக்கழகம்" போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் பகீர் புகார்!

By

Published : Apr 9, 2023, 2:40 PM IST

Updated : Apr 9, 2023, 4:12 PM IST

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், பெண் பணியாளர்களை பாலியல் ரீதியாக அவமரியாதை செய்வதாகவும் கூறி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் நலச்சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Periyar University workers association protest
பல்கலைக்கழக நிர்வாகிகளைக் கண்டித்து பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

"காமஷேத்ராவாக மாறிய பெரியார் பல்கலைக்கழகம்" போராட்டத்தில் குறித்த ஊழியர்கள் பகீர் புகார்!

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் ஊழல்கள், பெண் பணியாளர்கள் பாலியல் ரீதியாக அவமதிக்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைக் கண்டித்தும் அவர்களின் முறைகேடுகளை விசாரித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது தொடர்பாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோ கூறுகையில், “பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் பணி நீக்கம் செய்ய வேண்டும்.தமிழக அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளை உடனடியாக விசாரிக்க வேண்டும். முறைகேடு செயலில் ஈடுபட்ட நபர்களைப் பணி நீக்கம் செய்து தமிழக அரசு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். ஓதுவாராக பணிபுரிந்த ஒருவரைத் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணி நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். பெண் பணியாளர்களை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் எங்களுக்குத் தமிழக அரசு உரியத் தீர்வை தர வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விரைவில் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்” இளங்கோ கூறினார்.

இந்த போராட்டத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் குழப்பம்; மறுமதிப்பீடு செய்து முடிவை வெளியிட வேண்டும் - மருத்துவர் ராமதாஸ்

Last Updated : Apr 9, 2023, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details