தமிழ்நாடு

tamil nadu

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

By

Published : Oct 8, 2021, 10:14 AM IST

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதோடு 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், வலைகளைச் சேதப்படுத்தினர்.

navy attack  srilankan navy attack  rameshwaram fishermen  rameshwaram  boats  srilankan navy attacked rameshwaram fishermen boats  ramanathapuram news  ramanathapuram latest news  ராமநாதபுரம் செய்திகள்  இலங்கை கடற்படை  மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை  மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்  இலங்கை கடற்படையினர் தாக்குதல்
மீனவர்கள்

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (அக்டோபர் 7) மீன் பிடிப்பதற்காக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

அப்போது அவர்கள் கற்களைக் கொண்டு தாக்கியதால் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்தன. மேலும் வலைகளை வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலில் சேதமடைந்த படகிற்கு, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: தொடர் கொள்ளை: ஹெல்மெட் கொள்ளையன் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details