ராமநாதபுரம்: கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழாவும், 61வது குருபூஜை விழாவும் இன்று (அக்.30) விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினரும், முக்கிய தலைவர்களும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி விட்டு திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த சிலர் "எடப்பாடி பழனிசாமி ஒழிக" என்று கோஷம் எழுப்பினர். அத்துடன் அதில் ஒரு நபர் எடப்பாடி பழனிசாமி காரின் மீது செருப்பை தூக்கி எறிந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.