ராமநாதபுரம்: பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி இல்ல திருமண நிகழ்வில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கீழடியில் நடந்துவரும் அகழாய்வுகள் மூலம் உண்மைகள் வெளியே தெரியக்கூடாது என்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம்.
காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச கச்சா எண்ணெய் மதிப்பு 100 டாலராக இருந்தது. தற்போது, 74 டாலாராக இருக்கிறது. இருப்பினும், ஒன்றிய அரசு வரிவிதிப்பு மூலமாக பெட்ரோலிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து பெரும் சீரழிவை உண்டாக்குகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சி
இந்த வரிவிதிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்குத்தான் வருவாய் செல்லும். பணமதிப்பிழப்பின் மூலம் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.