புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குடிபோதையில் முகமது, அபுதாகிர் ஆகிய இருவரும் சொத்துத் தகராறில் ஈடுபட்டுள்ளதாக அறந்தாங்கி சோதனை சாவடியில் பணியிலிருந்த பெண் காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெண் காவலர், அங்கு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருந்தவர்களிடம் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது பெண் காவலர் ஒருவரை அபுதாகிர் தரக்குறைவாக பேசியது மட்டுமல்லாது, அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.