தமிழ்நாடு

tamil nadu

சுவர் இடிந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு!

By

Published : Dec 3, 2020, 10:09 AM IST

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுமி உயிரிழந்தார்.

சுவர் இடிந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு
சுவர் இடிந்த விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது ஓட்டு வீட்டில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்துவருகிறார்.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், வெங்கடேசன் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில், வெங்கடேசனின் 7 வயது மகள் யோசனா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு வி. களத்ததூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: டிப்பர் லாரி மோதல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!

ABOUT THE AUTHOR

...view details