தமிழ்நாடு

tamil nadu

பெரம்பலூர் அருகே பழமையான தேவாலயம் இடிப்பு

By

Published : Aug 11, 2022, 6:52 AM IST

பெரம்பலூர் அருகே பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்ட 161 ஆண்டுகள் பழமையான தேவாலயம் இடிக்கப்பட்டது.

Etvபெரம்பலூர் அருகே பழமையான தேவாலயம் இடிப்பு Bharat
Etv Bhபெரம்பலூர் அருகே பழமையான தேவாலயம் இடிப்புarat

பெரம்பலூர் : குரும்பலூர் பேரூராட்சி பாளையம் கிராமத்தில்
புனித சூசையப்பர் தேவாலயம் இருந்தது. இந்த ஆலயம், 1861 ஆம் ஆண்டு முன் ஆங்கிலேயர் ஆட்சியின் போது பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்டது.

இந்த தேவாலயம், 61 அடி உயரம் மற்றும் இரண்டு ஏக்கர் நிலத்தில் கிட்டத்தட்ட 8,800 சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்தது. நூற்றாண்டு கண்ட, இந்த தேவாலயம் கடந்த 2009-ல் அதன் மேற் கூரையின் ஒரு பகுதி உடைந்து இடிந்து விழுந்து. இதனைத்தொடர்ந்து, 2016 இல் இந்த தேவாலயம் வளாகத்தில் ஒரு புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

பெரம்பலூர் அருகே பழமையான தேவாலயம் இடிப்பு

இதனையடுத்து பாதுகாப்பை கருதி ஆலயத்தை இடிக்க முடிவு செய்து, தேவாலயத்தை இடிக்கும் பணி தொடங்கியது. ஜேசிபி உள்ளிட்ட எந்திரம் கொண்டு முன்பக்கம் மண்டபம், இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் கோபுரம், வெடி பொருட்கள் கொண்டு, தகர்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details