நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்குப் புறத்தில் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் இந்தக் குடவறை கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி இன்று (டிச. 25) அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆகம விதிப்படி பூஜை செய்து, பட்டாச்சாரியர்கள் பரமபத வாசல் வழியாகக் கூடையில் வைத்து ஜடாரியை கொண்டுவந்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்பி, சாமி தரிசனம்செய்தனர். கரோனா தொற்றுப் பரவல் காரணமாகச் சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.