தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி; போலிசார் விசாரணை

By

Published : Oct 13, 2022, 5:34 PM IST

மதுபோதையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய போதை ஆசாமியை போலிசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி
மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி

நாமக்கல்: ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தானது காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துநரிடம் பயணச் சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே மது பிரியர் நடத்துநரை தாக்கியுள்ளார்.

பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியதையடுத்து பேருந்து சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்து கீழே இறங்கிய பயணிகள், நடத்துநர் ஆகியோர் போதை ஆசாமியை தாக்கினர்.

மதுபோதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போதை ஆசாமியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒருதலை காதல் விவகாரம்; இளைஞருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

ABOUT THE AUTHOR

...view details