தமிழ்நாடு

tamil nadu

குறைதீர்க்கும் முகாமில் ஒத்திவைக்கப்பட்டிருந்த மனுக்கள் தீர்வு!

By

Published : Oct 7, 2020, 9:52 PM IST

மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுதாரர் குறைதீர்க்கும் முகாமில் தீர்க்கப்படாமல் இருந்த 7 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாமில் ஒத்திவைக்கப்பட்டிருந்த மனுக்கள் தீர்வு
குறைதீர்க்கும் முகாமில் ஒத்திவைக்கப்பட்டிருந்த மனுக்கள் தீர்வு

மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் மனுதாரர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

மேலும் மயிலாடுதுறை காவல் உபகோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோவில், பாலையூர், பெரம்பூர் மற்றும் பாகசாலை ஆகிய 7 காவல் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருந்த 10க்கும் மேற்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

முடிவில், தீர்க்கப்படாமல் இருந்த 7 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. வெகு நாள்களாக தீர்க்கப்படாமல் இருந்த வழக்குகள் உடனடியாக தீர்க்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட வழக்காடிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:அக். 11 முதல் 17 வரை கிராம சபை மீட்டு வாரமாக கடைப்பிடிக்க வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details