தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 8 பேர் மீது போக்சோ!

By

Published : Nov 14, 2019, 11:46 PM IST

நாகை: வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

Nagapattinam girl child rape by eight members police arrested five members

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனை அறிந்த தாஸின் நண்பர்களான சூர்யா(22), ரூபன் காரல் மார்கஸ்(20), வீரையன்(19), கோகுல்(19), பொன்னையன், முத்து, முருகன் உள்ளிட்ட எட்டு பேரும் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு படிக்கச் சென்ற சிறுமி சில வாரங்களுக்கு முன்பு விடுதியில் மயங்கி விழுந்துள்ளார்.

விடுதிப்பொறுப்பாளர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து விடுதியிலிருந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த சிறுமியின் பெற்றோர், கர்ப்பமானது குறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்

இதில், தாஸ், சூர்யா உட்பட எட்டு பேரும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வர எட்டு பேர் மீதும் சிறுமியின் பெற்றோர் நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு பேர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், தாஸ், சூர்யா, ரூபன் கார்ல் மார்க்ஸ், வீரையன், கோகுல் ஆகிய ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பொன்னையன், முத்து, முருகன் ஆகிய மூவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 3 பேர் கைது!

Intro:வேளாங்கண்ணியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 8 பேர் மீது போக்சோ: 5 பேர் கைது: 3 பேருக்கு வலைவீச்சு:Body:வேளாங்கண்ணியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 8 பேர் மீது போக்சோ: 5 பேர் கைது: 3 பேருக்கு வலைவீச்சு:

கடலூர் மாவட்டம், வடலூரைச் சேர்ந்த தம்பதியர் ஆறுமுகம், மங்கையர்கரசி துப்புரவு தொழிலாளிகளான இவர்களுக்கு. 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது கடைசி மகள் அமுதா (15) பெயர் மாற்றப்பட்டுள்ளது. துப்புரவு தொழிலாளர்களான ஆறுமுகம் தம்பதியினர் இருவரும் வேளாங்கண்ணி பேரூராட்சியில் இரண்டு ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது கடைசி மகள் அமுதா புதுச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மே மாதம் தனது பெற்றோரை பார்க்க வேளாங்கண்ணி வந்த போது ஆறுமுகத்தின் நண்பர் தாஸ் (41) இரவு நேரத்தில் அமுதாவை பேருராட்சி அலுவலக பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த தாஸின் நண்பர்களான சூர்யா (22), ரூபன் காரல் மார்க்ஸ் (20),வீரையன் (19) கோகுல் (19) பொன்னையன், முத்து, முருகன் உள்ளிட்ட 8 பேரும் அமுதாவை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

விடுமுறை முடிந்து புதுச்சேரிக்கு படிக்க செ‍ன்ற அமுதா சில வாரங்களுக்கு முன் விடுதியில் மயங்கி விழுந்துள்ளார். விடுதி காவலர்கள் மருத்துமனை அழைத்துச் சென்ற போது அமுதா கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் தெரிந்ததும் விடுதியிலிருந்து அமுதாவை வீட்டிற்கு அழைத்து வந்த மங்கையர்கரசி விசாரித்த போது அமுதாவை தாஸ், சூரியா உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்து பாலியல் பாலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் அமுதாவை பாலியல் பாலாத்காரம் செய்ததாக தாஸ், சூர்யா, ரூபன், காரல்மார்க்ஸ், வீரையன், கோகுல் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய பொன்னையன், முத்து , முருகன் ஆகிய மூவரைரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details