மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர், கீழத்தெருவைச் சேர்ந்தவர் குமார் மகன் பாலமுருகன் (22). ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், மயிலாடுதுறை நர்சிங் கல்லூரியில் பயின்ற 17 வயது இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்துள்ளார்.
தொடர்ந்து, கடந்த 8ஆம் தேதி மயிலாடுதுறைக்கு வந்த இளம்பெண் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த அவரது பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலமுருகன் என்பவர் தங்களது மகளை கடத்திச் சென்றதாகப் புகார் அளித்தனர்.